Editorial:

கூத்தரங்கம் மேலும்
விரிவும் ஆழமும் பெறும்.

கூத்தரங்கம் கடந்த மார்ச் - 2005 உடன் தனது ஓராண்டைப் பூர்த்திசெய்துள்ளது. இந்த ஓராண்டில் 06 இதழ்களை வெளியிட்டுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூத்தரங்கத்தை வெளியிடுவது என்று திட்டமிட்டிருந்தோம். அதன்படி குறித்த காலத்தில் இதழ்களை வெளியிட முடிந்தது. இதற்கு நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆதரவு தந்துதவினார்கள்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial: பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்

டிசெம்பர் 26, 2004 சுனாமிப் பேரலை தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாக்கி பல ஆயிரம் உயிர்களைப் பறித்துச் சென்றது. சொத்திழப்புக்களும் உயிரிழப்புக்களும் ஆழமான மனவடுக்களை உருவாக்கியுள்ளன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial: நாடகப் போட்டிகள்

சென்ற யூலை, ஓகஸ்ட் மாதங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகமான நாடகப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. சிறுவர் நாடக விழா என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் நாடகப் போட்டிகள் கல்வி வலய ரீதியாக நடைபெற்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial: தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைக் காப்பவர் யார்?

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் காணப்படும் பாரம்பரிய அரங்குகளாக கூத்துக்களையும் இசை நாடகங்களையுமே கொள்ளலாம்.

இவ்வரங்குகளும் இன்று அழிந்து வருகின்றன. தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஐம்பதுகளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் மேற்கொண்டிருந்தார். அவரது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமை வேதனைக்குரியது. பேராசிரியரின் முயற்சிக்குப் பின் எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, அவரது முயற்சிகளை விமர்சிக்கும் போக்கே மேலோங்குகிறது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

Editorial: சிறுவர் அரங்கச் செயற்பாடுகள்

சிறுவர்களுக்கு நன்மையளிப்பதான சிறுவர் அரங்கை பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தும் விருப்பத்தோடு பல செயற்பாடுகளை கல்வியலாளர்கள் சிலர் முன்னெடுக்கிறார்கள். அவர்களின் ஆக்கபூர்வமான முயற்சிக்கு நாடகத்துறை சார்ந்தோர் தன்னலமின்றி ஆதரவளித்தல் அவசியமானது.

ஆரம்பப் பாடசாலைக் கல்விச்செயற்பாட்டில் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளை உட்புகுத்துவதற்கு ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து சிறுவர் அரங்கப் பயிற்சிகளை வழங்குதல் மிக அவசியம். இதுவே நின்று நிலைக்கக்கூடியது. இந்தப் பணியை ஒரு கால வரையறைக்குள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial : அரங்க உறவுகளின் பலத்தில் சாதிப்போம்

கூத்தரங்கம் முதலாவது பிரதியுடன் நாம் பல அரங்கவியலாளர்களை, அரங்க ஆர்வலர்களை, அரங்க மாணவர்களை அணுகினோம். கூத்தரங்கு கண்டு மகிழ்ந்தார்கள். தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்கள், பாராட்டினார்கள் அச்சடித்த ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்துபோயின.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

அமுங்கிய மௌனங்களை உடைத்த பங்களிப்பும் குழந்தைக்கே உரியது.

‘நாடக வழக்கு’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சபா ஜெயராசா

saba-jayarajah.jpg

நாடக வழக்கு நூல் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களது உரை வருமாறு:

குழந்தை சண்முகலிங்கம் அவர்களது அரங்கியற் கட்டுரையாக்கங்களும், நேர்காணல்களும் தனித்த ஒரு தொகுப்பு நூலாக இணுவில் கலை இலக்கிய வட்டத்தினரால் - கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களது முயற்சியினால் - வெளியிடப்பட்டுள்ளமை அறிக்கை நோக்கிலும், ஆய்வு நோக்கிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதொரு புலமை நடவடிக்கையாகும்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

‘கூத்தரங்கம்’ வெளியீடு

கூத்தரங்கின் முதலாவது இதழ் வெளியீடு 06.03.2004 அன்று மாலை 7.00 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. தே.தேவானந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூத்தரங்கின் ஆசிரியர்களும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் மாணவர்களும் பங்கு கொண்டனர்.

koothhu-relise.jpgஇந்த நிகழ்வில் கூத்தரங்கின் முதலாவது பிரதியை ஈழத்து நவீன் தமிழ் நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம், ஈழத்து மூத்த எழுத்தாளர் பேராசிரியர் நந்தி அவர்களுக்கு வழங்கி கூத்தரங்கினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இதில், நாடகமும் அரங்கியலும் துறைசார் சஞ்சிகைகள் பல ஏற்கனவே வந்திருப்பது பற்றி குழந்தை ம.சண்முகலிங்கம் குறிப்பிட்டார். அவற்றில் பல இடைநடுவில் நின்றுவிட்டன. தற்போது திருமறைக் கலாமன்றத்தின் ‘ஆற்றுகை’ தொடர்ந்து வெளி வருகிறது. இருப்பினும், தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். இந்தியாவில் இருந்து ‘கட்டியம்’ என்ற உலகத் தமிழ் அரங்க இதழ் வெளிவருகிறது. அவர்களுக்கும் ஆக்கங்கள் பெறுவதில் சிரமங்கள் உள்ளன.

‘அரங்கம்’, ‘கல்யாணி’, ‘நாடக வெளி’ (இந்தியா) போன்றன இடை நடுவில் நின்றுபோன நாடக சஞ்சிகைகள் என்பதையும் சுட்டிக் காட்டினார். இந்தப் பின்னணியில் மிக நம்பிக்கையுடன் செயல் திறன் அரங்க இயக்கத்தினர் கூத்தரங்கை ஒரு செய்தி இதழாகக் கொண்டு வருவது மகிழ்வுக்குரியது. தளராது தொடர்ந்து செயற்படவேண்டும் என்றும் குழந்தை ம.சண்முகலிங்கம் குறிப்பிட்டார்.

பேராசிரியர் நந்தி அவர்கள் தனது கருத்துரையில், கூத்தரங்கை, தொடர்ந்து வெளியிடுவது தொடர்பான தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

ஆசரியர் குழு ஒன்று அமைந்திருப்பது பாரட்டுக்குரியது. இது தொடர்ந்து நடப்பதற்கான நல்லதொரு வழி, ஒரு சிலர் விடுபட்டுச் சென்றாலும் வேறு சிலரை உள்வாங்கித் தொடர்ந்து நடத்த முடியும். இருப்பினும் தொடர்ச்சியை பேணுவதற்கு ஒருவராவது தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஈழத்து சஞ்சிகை மரபை எடுத்துக் கொண்டால் தனிமனிதர்களின் முயற்சியால் நடத்தப்படுகின்ற சஞ்சிகைகள்தான் தொடர்ந்து வெளிவருகின்றன. ‘மல்லிகை’ 35 வருடங்களுக்கு மேலாக நடப்பதற்கு காரணம் டொமினிக் ஜீவா என்ற தனி மனிதன்தான், என்பதை குறிப்பிட்டு தனி மனிதன் இல்லாத போது அந்தச் சஞ்சிகைகளின் நிலை கேள்விக் குரியதாகிப் போகும் என்பதையும் வலியுறுத்தி, இங்கு ஆசிரியர் குழு ஒன்று இருப்பதால் அவ்வாறான துயர் ஏற்படுவதற்கு வாய்ப்புக் குறைவு என்றும் கூறினார்.

கூத்தரங்கில் வருகின்ற கட்டுரைகளை ஆண்டு ஒன்றில் தொகுத்து தனி ஒரு புத்தகமாக வெளியிடலாம். அவை மிகப் பயனுள்ளதாக அமையும். செலவைச் சீர்செய்யவும் இலகுவாக இருக்குமென்று குறிப்;பிட்டார்.

கூத்தரங்கில் தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்திலும் நடக்கின்ற அரங்க முயற்சிகள் வெளிவரவேண்டும். ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று அங்கு நாடகங்கள் செய்பவர்களைச் சந்தித்து வருவது நல்லது என்று குறிப்பிட்டார். மேலும் கூத்தரங்கை நாடக ஆர்வலர்கள் அனைவரும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்ததுடன் வெளியீட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

Editorial: அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம்.

தமிழர் தாயகமெங்கும் பரவிக்கிடந்த பல அரங்க வடிவங்கள் செத்து மடிந்து போயின. எஞ்சிக் கிடப்பவை குற்றுயிராக ஊசலாடுகின்றன.

அரங்கில் ஆடியவர்கள் அரங்கக் கலையொடு தொடர்பறுந்தவர்களாகத் தம் நாளாந்த ஜீவனோபாயத்திற்குத் திண்டாடுகிறார்கள். அரங்கில் ஆடி ஓய்ந்த பலர் எவரது அரவணைப்புமின்றி தனிமையில் அல்லாடுகிறார்கள். ஊர்களில் நாடகங்கள் போடுவதற்கு ஆட்கள் இல்லை, மேடைகள் இல்லை, வசதிகள் இல்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

உங்கள் ஆதரவுடன்…..

ஈழத் தமிழரின் கலாசாரத் தலைநகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணம். பாட்டும் கூத்தும் யாழ்பாணத்தானோடு கூடப்பிறந்தது. எத்துணை துயர் வந்த போதும் தமது பாரம்பரியத்தையும் கலைகளையும் காப்பதில் அவர்கள் தீவிரமாகவே இருந்துள்ளார்கள்; இருக்கின்றார்கள். இத்தனை துயர் பட்டபோதும் கூட இன்றும் - இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் - தமது கலைகளைப் பேணிக் காக்கும் மாண்பு அவர்களிடம் இருக்கின்றது.

அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் ஆறுதலுக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரங்குசார் நிறுவனம் ‘செயல்திறன் அரங்க இயக்கம்’ திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் இருந்து இயங்கி வருகின்றது இந்த நிறுவனம். நாடகம் மற்றும் அரங்கு சார் நடவடிக்கைகளே இதன் முழு நாதம். யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் துறையின் சிறப்புப் பட்டதாரியான திரு. தே.தேவானந்த் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு எழுச்சியுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் நாடக அரங்குக்கான இதழாக ‘கூத்தரங்கம்’ என்ற இதழை வெளியிடுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரும் இந்த இதழை இணையத்தில் ஏற்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் வலம் வரவிடவேண்டும் என்பது எமது நீண்ட நாள் அவா. எனினும் நிதி வளங்களும் தொழில்நுட்ப வசதிகளும் கிடைப்பத்தில் இருக்கும் சிரமம் காரணமாக இதுநாள் வரை அது நடைபெறாமலேயே போயிற்று. இப்போது இந்த இலவச வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களிடம் ஈழத்தின் நாடகக் கலையைக் கொண்டு சோர்க்கும் முகமாக இந்த வலைப் பதிவை ஆரம்பிக்கின்றோம்.  உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எங்கள் பயணம் தொடரும்

- ஆசிரியர் குழு

பொது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . மறுமொழி இல்லை »