ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்புப் படிமுறை

அனுபவப் பகிர்வு

- சா.சிவயோகன்

arkolo-1.jpg

 மனித நாகரீகத்தின் தோற்றத்தோடு கலைப்படைப்புக்களின் வரலாறும் சங்கமிக்கின்றது. ஒரு உயிரியினுடைய அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் மனித மூளையினது விருத்தி, வேறு பல தேவைகளை வேண்டி நிற்கையில், இவற்றை நிறைவேற்றித் திருப்தி காணவேண்டிய நிலைமையின் ஒரு அம்சமாகவே கலைகள் உருவாகியிருக்க வேண்டும். எழுந்தமானமான வெளிப்பாடும், ரசனையும், திருப்தியும் மெல்ல மெல்ல ஏதோவொரு ஒழுங்கமைவுக்குள் வரத்தொடங்க, அவை தனித்தனியாக அடையாளங் கண்டு வேறுபடுத்தக் கூடிய தன்மைகளையுடைய வெவ்வேறு கலைப்படைப்புகள் ஆகுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பகிர்வு இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

நான் உந்தன் பிள்ளை, நீ எந்தன் அன்னை

ஆழிப்பேரலையின் அவலம் தொடர்பாக அரங்க ஈடுபாட்டார்களின் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு கவிதை வடிவம் கொடுத்துள்ளார் கவிஞர் நா.சிவசிதம்பரம். இக்கவிதை செயல்திறன் அரங்க இயக்கத் தயாரிப்பில் இசைப் பாடலாகவும் வெளிவந்துள்ளது.

last-page-copy.jpg 

அலை கடலே
நான் உந்தன் பிள்ளை
நீ எந்தன் அன்னை

அம்மா இந்நாள் அழகே!
ஆற்றலின் ஊற்றே! உயிரே!
ஏன் வாழ் முதலே வணங்குகிறேன் !

தீ – வெளி – காற்றொடு
திகழ் நிலம் - நீரென
தினமும் மலரும் இயற்கை அம்மா

முற்றத்தில் கோலம் செய்
முழுவான நிலவும் - எம்
சுற்றமும் நீதானே!

கற்றது உன் மடியில்
காலங்கள் உன் அடியில்
முற்றிலும் நீதானே!

வான் பொழி மழையும்
வளர் அலை கடலும்
தாய் தந்தை உறவம்மா

நான் உந்தன் பிள்ளை
நீ எந்தன் அன்னை
வாழ்வுந்தன் வரம் அம்மா

கனவிலும் நினைவு தாருங்கள்
மனதிலும் குளிர்மை வரும் - பாருங்கள்
நீ தருவாய் ! என் வாழ்முதல் ஆனவளே!

குhலை செவ்வானத்தின்
குதிர் கூடத் தாயே – உன்
கருணையின் வழிதானே!

குhல் சுடும் வெயிலொடு
கடுங்கூதல் மழையும் - உன்
கடமையின் தொடர் தானே

பார்வையில் ஒளியும்
பழகும் நல்லுறவும்
நீ தந்த நேசம் அம்மா
வெளிச்சமும் பகலும்
விளக்குடன் இரவும்
வேருக்குள் ஈரம் அம்மா

கனவிலும் நினைவு தாருங்கள்
மனதிலும் குளிர்மை வரும் - பாருங்கள்
நீ தருவாய்! ஏன் வாழ்முதலாளனவளே!

மாறும் - நாள் எந்த நாளும்
ஓயாது – முன்னேற்றம் -
கடலலை போல் உள்ளம்

தீயும் தீபத்தின் ஒளியாகும்
பாரும்!
தாயின் இருவிழி தன்னில்

பகிர்வு இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

அரங்குசார் அனுபவப்பகிர்வு

எஸ்.சந்திரரூபி

அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எனது கல்வியை அருனோதயாக் கல்லூhயில் கற்றேன். கல்வியில் உள்ள அக்கறையை விட எனக்கு விளையாட்டுக்களிலேயே அதிக அக்கறை இருந்தது. இத்தகைய சூழலில் 1987ம் ஆண்டு வெடிகுண்டினால் எனது காலை இழந்தேன். இக்காலகட்டம் என் வாழ்க்கையில் திருப்பத்தை கொண்டுவந்தது. இனி என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியுடன் இருந்த எனக்கு பெற்றோர், நண்பர்கள், அயலவர்கள் உதவியினால் கல்வியை தொடரக்கூடியதாக இருந்தது. எனினும் இன்னொருவரை நம்பி நான் வாழவேண்டி இருக்கிறதே என்ற கவலை ஆழ்மனதில் இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் உயர்தரம் வரை படித்துவிட்டு சுயதொழில்கள் சிலவற்றையும் கற்றுக் கொண்டு இருந்தேன். இத்தகைய நிலையில்தான் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் இருந்து இருவர் வந்து தங்களை அறிமுகப்படுத்தி நிறுவனத்தின் மிதிவெடி விழிப்புணர்வுச் செயற்பாட்டைக் கூறி தங்களுடன் என்னையும் இணைந்து செயற்படுமாறு கேட்டார்கள். எனக்கு என்னைப்போன்ற நிலையில் இருந்த என் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் இருந்ததனால் அவர்கள் கேட்டவுடன் இணைந்து கொண்டேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பகிர்வு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

உண்மையான உழைப்பின் ஊடாக ஒரு நாடகம் முழுமை பெற்றுள்ளது.

- கு.லக்ஷ்மணன்

இன்றைக்கு அரங்கு வழங்கும் நிலையில் பல மாறுபாடான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. இந்நிலையில் தனிமனித ஆளுமை விருத்திக்கு அரங்கு மிகப்பெரும் பங்காற்றுகிறது என்பது பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தே. ‘நெஞ்சுறுத்தும் கானல்’ என்ற நாடகமும் அது சார்ந்த செயற்பாடுகளும் இவ்வரங்கோடு தொடர்பு கொண்ட அரங்கச் செயலாளிகளிடத்தில் ஏராளமான வளர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதை அவதானிக்கின்றேன். அவை அரங்கியல் சார்ந்தவையாக மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்தும் அமைந்திருப்பது மகிழ்வைத் தருவதாக இருக்கிறது. என்னோடு நட்புறவுடன் இருக்கும் இவர்களிடம் நெருங்கியிருக்கிற பொழுதுகளில் நான் அவதானித்த வளர்ச்சிப்பாங்கான மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் பொருத்தமானது என்றே நினைக்கின்றேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பகிர்வு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »