மனம் போல் மாங்கல்யம் நாட்டுக்கூத்து

-   இ.வரதர் (ஆணையூர்)

சென்ற பங்குனி மாதம் 27ம் திகதி இளவாலையில் சீந்திப்பந்தல் எனும் இடத்தில் ‘மனம்போல் மாங்கல்யம்’ எனும் நாட்டுக்கூத்து (தென்மோடி) மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தின் மூலக்கரு ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியரின் சிந்தனையில் உருவாகியது.

யாழ் மண்ணில் இந்நாடகத்தை ஒப்புநோக்கிப் பாடியவர் மறைந்த கணித ஆசான் ஆசீர்வாதம். துணைநின்றவர் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி அண்ணாவியார் திருப்புகுந்தார் யோசப். அன்று இந்நாட்டுக் கூத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யாமான அண்ணாவிமார்கள்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

மனிதரிலே மனிதருண்டு. வானவரும் மனிதராய் வருவதுண்டு

suntha-7.jpgஎன்.சுந்தா பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு

- பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி

மரணம் எப்போழுதுமே அதன் எதிர்பார்க்கப்படாத் தன்மை காரணமாக நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதிலும் பார்க்க மனத்தை பிழிந்து உதறுவது, அதனை, அதன் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது மானுட நிர்ப்பந்தமாகும். 

 “அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதில் ஓர் எழுத்தை அழித்திடுமோ” சுந்தா, சுந்தா என்று நாங்கள் வாய்நிறைய மனம் நிறைய அழைத்து வந்த, பேசிவந்த நா.சுந்தரலிங்கம் என்றும் “என். சுந்தா” இன்று நம்மிடையே இல்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

விடியலின் விம்பங்கள்

சமாதானம் நின்று நிலைக்கவேண்டும் என்பதற்காகப் பல தரப்பினரும் பல்வேறு வழிகளில் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானத்தில் ஏற்படுகின்ற சிறு சீறலைக் கண்டு ‘எல்லாம் உடைந்து விடும்’ எனும் அச்சத்தில் மக்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்மை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கிற அதிகார சக்திகளிற்கு எதிராகப் போராடும் நாம், எமக்குள்ளேயே நிலவும் சின்னச் சின்னப் பிரச்சினைகள், குரோதங்கள், துவேசங்கள், மனக்கசப்புக்களைக் களைந்தெறிந்துவிட்டு ‘மன இருள்’ அகற்றி அணிதிரள்வோம் என வேண்டுதல் செய்தவாறு வவுனியா அரங்காலயா பண்பாட்டுக் குழுவினர் குடாநாட்டிற்கு 19.12.2004 அன்று வருகை தந்தனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

அரங்கச் செயற்பாட்டாளர் ச.பாஸ்கரன் பற்றி…

அரங்க வரலாற்றில் மறைந்து கிடப்பவர்கள் 01

- ஆனந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் 1994ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வண்டிலொன்று முன் வாயில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அனுமதி பெற்று உள் நுழைகிறது. அதனை வயோதிபத் தோற்றமுடைய ஒருவர் ஓட்டிச் செல்கிறார். மெல்லியதாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. வண்டில்  பல்கலைக்கழக வீதியில் உருளத்  தொடங்கியதும் இரண்டு மாணவர்கள் அதில் ஏறி நின்றபடி செல்கிறார்கள். மாணவர்கள் ஊழியர்கள், விரிவுரையாளர்கள் அனைவரும்  என்ன இது? என்று கேள்வியுடன் அங்காங்கே நின்று பார்க்கிறார்கள். வண்டி ஓட்டி வரும் முதியவர் தோற்றத்தையுடையவர் பாடிச் செல்கிறார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

தொம்சனின் பிரயோக அரங்கக் கருத்தரங்கு

(பிரிட்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் ஜேம்ஸ் தொம்சன் அண்மையில் இலங்கை வந்திருந்தார்.

2000ம் ஆண்டு இலங்கைக்கு முதல்முதலில் வந்திருந்த ஜேமஸ் தொம்சன் அவர்கள் யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் பிரயோக அரங்கக் களப்பயிற்சிகளை நடத்தியிருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

கிராம மட்டத்திலான நாடகப் போட்டி

கியூடெக் நிறுவனத்தால் நடத்தப்பட்டது

யாழ் கியூடெக் நிறுவனத்தினரால் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி கிராம மட்டங்களுக்கு இடையிலான நாடகப் பொட்டி யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய மண்டபத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு 15 கிராமங்கள் பதிவு செய்துகொண்டன. ஆயினும் 12 கிராமங்களைச் சேர்ந்த நாடகங்களே போட்டியில் கலந்துகொண்டன. இந்நாடகங்களில் இன்றைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல், உளத் தாக்கங்களே கருப்பொருளாக அமைய வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது. போட்டி விதியும் அதுவே. பங்குபற்றுனர்களுக்கு வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. நாடகத்தில் ஈடுபாடுள்ள எவரும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடகவிழா – 2004

மானிப்பாய் இந்துக் கல்லூரி வருடாந்தம் ஜூலை மாதம் 01, 02ஆம் திகதிகளில் நாடக விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றது. இவ்வாண்டும் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. பாடசாலையில் உள்ள மாணிக்கர், வாகீசர், சம்பந்தர், சுந்தரர் இல்லங்களுக்கிடையிலான போட்டியாக இந்நாடக விழா நடைபெறுகின்றது.

பொதுவாகப் பாடசாலைகளில் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் நடத்தப்படுவதே வழமை. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மட்டும் இல்லங்களுக்கிடையில் நாடகப் போட்டி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடக விழா – 2004

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மத்தமிழ் மன்றத்தினால் ஜூன் மாதம் 8, 9ஆம் திகதிகளில் முத்தமிழ் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் இயல், இசை நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலாம் நாள் நிகழ்வான நாடக விழா கா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற. இவ்விழாவின் பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ப.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். இவர் தனது உரையில் நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும்போது “வாழ்வியல் மேம்பாட்டிற்கும் சமூக விழுமிய மேம்பாட்டிற்குமான கருத்துக்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »

திரை மெல்லத் திறக்கிறது

thirai-copy.jpg

கிராம மட்டத்தில், நிகழ்வுகளில் நாடகம் மேடையேற்றுவதற்காக தாவடி தெற்கில் ஓர் நாடகக் குழு தனது பணியை மேற்கொண்டு வருகிறது. “சிறி காளியம்பாள்” சனசமூக நிலையத்தில் “அம்பாள் நாடக மன்றம்” என்ற பெயரில் 60களில் இருந்து இயங்கி வரும் இந்நாடகக் குழு சனசமூக நிலைய நிகழ்வுகள், கோயிற் திருவிழாக்கள், பண்டிகைகளில் நாடகத்தை மேடையேற்றி வருகிறது.

இம்மன்றத்தின் நாடகச் செயற்பாடுகளிற்கு திரு. முருகர் அப்பையா (64), திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம் (56), திரு. முருகேசு இரத்தினசிங்கம் (50) என்பவர்கள் உறுதுணையாக இருப்பதோடு, ஆறுமுகம் தெய்வேந்திரம், தேசிங்கராஜா செல்வக்குமார் (23) ஆகியோர் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து வந்துள்ளார்கள். தமது நாடகங்களை “சமூக நாடகங்கள்” எனக் கூறும் இவர்கள், பெரும்பாலும் சமகால ஊர்ப் பிரச்சினைகளை நாடகக் கதையாக அமைத்துக் கொள்கிறார்கள். இவற்றுள் “வித்தியா சமானவள்”, “கதிரை யாருக்கு?” போன்ற நாடகங்களைக் குறிப்பிடத்தக்கவை எனத் தெரிவிக்கிறார்கள்.

அத்தோடு இவர்கள் வீதி நாடகங்கள் அளிக்கை செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். கலை பண்பாட்டுக்கழக ஆதரவுடன் பல்வேறு வீதி நாடகங்களை அளிக்கை செய்துள்ளார்கள். “மாவீரர் வாரம்”, “மண்ணுக்காக……”, “போர் மண்ணில் மீண்டும் போர்”, “தீச்சுவாலை”, “நச்சுக் காற்று” என்பன தமது வீதி நாடகங்கள் எனத் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். இந்த வீதி நாடகங்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும், யுத்த அவலங்கள் சம்பந்தமாகவும், தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பேசுவதாக அமைந்திருந்தன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »