முதுமையின் முதிர்வில் ஒப்பனைக் கலைஞர்

பெஞ்சமின் ஐயா. நாடகத் துறை சார்ந்தோரிற்கு இவரைத் தெரியாதிருக்கBenchamin முடியாது. கூத்து, இசைநாடகம், இலக்கிய நாடகம், நவீன நாடகம், நாட்டிய நாடகங்கள் என பெஞ்சமின் ஐயாவின் தொடர்புகள் விரிவுபட்டன.

வேடஉடைகள், ஒப்பனைகள், அரங்க அமைப்புக்கள், காட்சித்திரைகள், தட்டிகள் என அரங்கத்துறைக்கான இவரது பங்களிப்பு நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது. 90வயதினைத் தாண்டி விட்ட இவர் தனது இளந்தாரிக் காலத்திலேயே மேற்குறித்த விடயங்களில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.

தனது 90வது வயதில் பெரும் பகுதியை அரங்கத்துறை சார்ந்த விடயங்களில் ஈடுபடுத்திய ஒப்பனைக் கலைஞரான  பெஞ்சமின் ஐயாவை கூத்தரங்கின் சார்பில் சந்தித்தோம். 25ம் ஆண்டளவில் இருந்து தனது நாடகத்துறை சார்ந்த அனுபவங்களை மீட்டு எம்முடன் கதைப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் பெஞ்சமின் ஐயா.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

தீனக்குழந்தைகள் நாடகம்: ஒரு பார்வை

இ.விஜி

சமூகத்தில் இன்று அரங்கு பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்காலத்தில் போரின் உடனடித் தேவைகளைப் பேசிய அரங்கு போர் சற்று ஓய்ந்திருக்கும் வேளையில் போரினால் பாதிக்கப்பட்ட மனிதமனங்களைப் ஆற்றுப்படுத்த முற்படுகின்றது. போரினால் நாம் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை அரங்கு பேசி வருகின்றது. அந்த வகையில் தே.தேவானந்தின் ‘நெஞ்சுறுத்தும் கானல்’, ‘இடர்கள் கெடுக’, ‘முடக்கம்’ போன்ற மிதிவெடி விழிப்புணர்வு நாடகங்கள் கடந்த ஆண்டுகளில் பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டன. அந்நாடகங்கள் பெரும்பாலும் மதிவெடியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் அப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. இப்பொழுது ‘தீனக் குழந்தைகள்’ எனும் நாடகம் தே.தேவானந்தினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு பாடசாலைகளில் மேடையேற்றப்படுகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

ஜனகரலய – மக்கள் களரி

People’s Theatre

“நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் கலை சமூகத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் செல்லக் கூடிய நிலையில் இன்று உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகக் குழுவாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று நாடகங்களை நிகழ்த்தினோம். இதன் மூலமாக உண்மையான அரங்கம் தொடர்பான அனுபவங்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அதனூடாக மக்களுக்கிடையில் நாடகங்களைப் போடும் விதிமுறை தொடர்பான எண்ணம் எம் மனதில் தோன்றியது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

கைகூப்பி அஞ்சலி

நாடக நெறியாளரும் ஆசிரியரும் தமிழ் மூதறிஞருமான கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் அமரத்துவம் அடைந்துள்ளார். தனது உடல் சுகயீனமான நிலையிலும் ஐந்தாவது கூத்தரங்கத்திற்காக ‘நடிப்பு: அது என்ன பாண்டம்’ என்ற தலைப்பில் கருத்துரை ஒன்றைத் தந்திருந்தார். இவருக்கு விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளனர். இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தாருடன் நாமும் துயர் பகிர்கின்றோம். கைகூப்பி அஞ்சலி செலுத்துகின்றோம்.

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

சுவிற்ஸர்லாந்தில் தமிழ் அரங்கு

anton-ponrajah.jpgஅன்ரன் பொன்ராஜ்  அவர்களுடனான உரையாடல்.

தே.தேவானந்த்

யாழ்ப்பாணத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடு ஈழத் தமிழ் அரங்க வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக உணரப்படுகிறது. நாடக அரங்கக் கல்லூரி எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் முற்பகுதியில் நடத்திய தொடர் அரங்கக் களப்பயிற்சிகள் முக்கியமானவை.  அவற்றில் பங்கு கொண்ட பலர் தொடர்ந்து அரங்கத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நாடக அரங்கக் கல்லூரி நடத்திய பயிற்சியில் பங்குபற்றியவர். இன்று சுவிஸ்ஸில் தொழில்முறை நடிகராக 1987ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இந்திய அரங்கு பற்றி பேராசிரியர் வீ.அரசு அவர்கள்…….

arasu.jpgசென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ.அரசு அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இவர் தமிழ் துறைப் பேராசிரியர் என்பதோடு நாடகத்துறை சார்ந்த ஈடுபாடு மிக்கவர். “கட்டியம்” நாடக இதழ் ஆசிரியராக இருந்து அதனை  வெளியிடுவதில் அரும் பணியாற்றி வருபவர். இவரது மனைவியாராகிய மங்கை அவர்களின் நாடக இயக்கம் சார்ந்த செயற்பாடுகளிற்கு உறுதுணையாக இருப்பதோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாடகச் செயற்பாடுகள் பற்றி நன்கறிந்திருப்பவர். தற்போது தமிழ் நாட்டிலும் மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்ற நாடக முயற்சிகள் பற்றி விமர்சனப் பார்வையுடன் நோக்குபவர். இவர் யாழ்ப்பாணம் வருகை தந்த போது பல விரிவுரைகளை, கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அதில் நாடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை ‘கூத்தரங்கில்” தொகுத்துத் தருகின்றோம்.                                                                                                              (ஆ.ர்)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

பிரயயோக அரங்கு என்பது ஒருவகையான அரங்கு அல்ல…..

இங்கிலாந்து மன்செஸ்ரர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் திரு ஜேம்ஸ் தொம்சன் அவர்கள் பிரயோக அரங்கு பற்றிய கருத்துரையை 29.07.2004 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார். அதன் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகின்றது.                                             (ஆ.ர்)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

சிரிக்க வைப்பதே ஒரே நோக்கம்

sireeppu_santhirakumar.jpgஅரியாலையூரில் நகைச்சுவை நாடகக் குழு

- இலக்கியா

யாழ்ப்பாணத்தில்  அரியாலைக் கிராமத்தில் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். ஆண்டு சித்திரைப் புத்தாண்டையொட்டி நடைபெற்று வருகின்ற சுதேசிய விழாவின் பேறுகளாக, அதில் முக்கிய ஈடுபாடு கொண்டவர்களாகவும், இந்நாடகத்துறை ஈடுபாடு கொண்டவர்கள் அறியப்பட்டுள்ளார்கள். 

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

ஐரோப்பாவில் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து

vaddukuthu.jpgஅ.விஐயநாதன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழுமிடங்களெங்கும் தமிழர் தம் பண்பாட்டை, பாரம்பரியங்களைப் பேணிவருதல் என்பது தாய் நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வேணவாவைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்ந்துவரும் ‘தமிழ்ப் பிள்ளைகள்’ தமிழ் மண்ணின் பண்பாடுகளை, பாரம்பரியங்களை அறிய வேண்டும் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் அவாவாகும். இதன் காரணமாகப் பலர் தமிழ்ப் பற்றுறுதியுடன் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான பல முயற்சிகள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும்

2004ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவுப் பேருரையும் அரங்க அளிக்கையும் நடைபெற்றன. இதனை பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு அறக்கட்டளை ஒழுங்க செய்து நடத்தியிருந்தது.

குழந்தை ம.சண்முலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நினைவுப் பேருரையை பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அரங்க அளிக்கையாக வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குவினரின் கீசகன் வதை வடமோடி நாட்டுக் கூத்து இடம்பெற்றது. இக்கூத்தில் இளைஞர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழி இல்லை »