
(23/04 /1935 - 27 /06/2009)
ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், இயற்கை எய்தினார். அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.
கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை பெரும் கவனத்திற்குரியது.
அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் கொண்டவை. சமூகப் பயனுடையவை.
அவரது மறைவையொட்டி அஞ்சலிகளையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் செய்திறன் அரங்க இயக்கமும் கூத்தரங்கமும் தெரிவித்துக் கொள்கின்றன.
கவிஞர் முருகையன் கூத்தரங்கம் இதழுக்கு வழங்கிய செவ்வியை இங்கு காணலாம்.
