நிலவருகே மரணம்! நாடக ஆற்றுகை பற்றி………

Nelavaruke Maranam

(மேலும் படங்கள் கலரியில்) 

- ஆனந்த்

ஸ்பெயின் நாட்டின் மிகப் பரவலாக அறியப்பட்ட நாடகக் கலைஞர் வெட்றிகோ கார்ஷியா லோர்காவின் Blood wedding நாடகம் சிங்களத்தில் “சந்த லங்க மரணய” (நிலவருகே மரணம்) என்ற பெயரில்  23.04.2005 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.

“நிலவருகே மரணம்” நாடகம் 2005ம் ஆண்டு தேசியநாடக விழாவில் வருடத்தின் சிறந்த நாடகம் என்ற விருதையும் சிறந்த நெறியாள்கை, சிறந்த தழுவல் எழுத்துரு, சிறந்த தற்புதுமையான இசையமைப்பு, சிறந்த நடன அமைப்பு, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒப்பனை வடிவமைப்பு போன்ற விருதுகளையும் பெற்றுக் கொண்டது. இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருப்பவர் ஆங்கில ஆசிரியராகக் கடமைபுரியும் கௌஷல்யா பெர்னாண்டோ. இவர் சிங்கள மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்த நிறைந்த அனுபவத்தைப் கொண்டுள்ளவர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நேர்காணல்: பேராசிரியர் க.சிவத்தம்பி (I)

நேர்கண்டவர் : தே.தேவானந்த் 

Prof. Sivathamby

கேள்வி:- ஈழத்தமிழ் அரங்க வரலாற்றிற்கு சாட்சியாக இருப்பவர்களில்; நீங்களும் ஒருவர். உங்களுக்கும் ஈழத் தமிழ் அரங்கத் துறைக்கும் உள்ள ஈடுபாடு பற்றிக் கூறுங்கள்?

பதில்:- எனக்கு அதிஷ்டவசமாகவோ அல்லது துரதிஷ்டவசமாகவோ பல துறைகளில் ஈடுபாடு இருந்தது. அதிலும் நாடகத்துறையில் அதன் ஒரு பிரிவில் மட்டும்தான் எனக்கு ஈடுபாடு என்று சொல்லமுடியாது. நாடகத்துறையில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு, அல்லது அதற்குள் புகுந்தது, ஈர்க்கப்பட்டது பற்றிக் கூறத்தொடங்குவது இந்தப் பேட்டியைச் சிக்கலானதாகவோ அல்லது சிக்கலானதிலும் பார்க்க ஒரு நீண்ட விடயமாகவோ ஆக்கிவிடும். எனவே நான் இதனை இவ்வாறு எடுத்துக்  கூறலாம் என்று கருதுகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செவ்வி இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்புப் படிமுறை

அனுபவப் பகிர்வு

- சா.சிவயோகன்

arkolo-1.jpg

 மனித நாகரீகத்தின் தோற்றத்தோடு கலைப்படைப்புக்களின் வரலாறும் சங்கமிக்கின்றது. ஒரு உயிரியினுடைய அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் மனித மூளையினது விருத்தி, வேறு பல தேவைகளை வேண்டி நிற்கையில், இவற்றை நிறைவேற்றித் திருப்தி காணவேண்டிய நிலைமையின் ஒரு அம்சமாகவே கலைகள் உருவாகியிருக்க வேண்டும். எழுந்தமானமான வெளிப்பாடும், ரசனையும், திருப்தியும் மெல்ல மெல்ல ஏதோவொரு ஒழுங்கமைவுக்குள் வரத்தொடங்க, அவை தனித்தனியாக அடையாளங் கண்டு வேறுபடுத்தக் கூடிய தன்மைகளையுடைய வெவ்வேறு கலைப்படைப்புகள் ஆகுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பகிர்வு இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

மனம் போல் மாங்கல்யம் நாட்டுக்கூத்து

-   இ.வரதர் (ஆணையூர்)

சென்ற பங்குனி மாதம் 27ம் திகதி இளவாலையில் சீந்திப்பந்தல் எனும் இடத்தில் ‘மனம்போல் மாங்கல்யம்’ எனும் நாட்டுக்கூத்து (தென்மோடி) மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தின் மூலக்கரு ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியரின் சிந்தனையில் உருவாகியது.

யாழ் மண்ணில் இந்நாடகத்தை ஒப்புநோக்கிப் பாடியவர் மறைந்த கணித ஆசான் ஆசீர்வாதம். துணைநின்றவர் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி அண்ணாவியார் திருப்புகுந்தார் யோசப். அன்று இந்நாட்டுக் கூத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யாமான அண்ணாவிமார்கள்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

மனிதரிலே மனிதருண்டு. வானவரும் மனிதராய் வருவதுண்டு

suntha-7.jpgஎன்.சுந்தா பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு

- பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி

மரணம் எப்போழுதுமே அதன் எதிர்பார்க்கப்படாத் தன்மை காரணமாக நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதிலும் பார்க்க மனத்தை பிழிந்து உதறுவது, அதனை, அதன் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது மானுட நிர்ப்பந்தமாகும். 

 “அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதில் ஓர் எழுத்தை அழித்திடுமோ” சுந்தா, சுந்தா என்று நாங்கள் வாய்நிறைய மனம் நிறைய அழைத்து வந்த, பேசிவந்த நா.சுந்தரலிங்கம் என்றும் “என். சுந்தா” இன்று நம்மிடையே இல்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இசைப்பார் இல்லாத இராகம்!

- பேராசிரியர் சி.மௌனகுரு

mavu-4.jpg

அமரர் நா.சுந்தரலிங்கம் அவர்களின் நினைவுரை நிகழ்வு 21-03-2005 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய உரை. அரங்கியல் மாணவர்களின் தேவை கருதி இங்கே பிரசுரிக்கிறோம்.

இப்போது இந்த தலைமுறையைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் இங்கு வரவேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது நண்பர் தேவானந் அவர்கள் தொடர்பு கொண்டார். இப்பிடி ஒரு கூட்டத்தை நிகழ்த்தலாம் என அவர் கேட்டுக் கொண்டார். நான் அவருக்கு கொடுத்த தலைப்பு ‘இசைப்பார் இல்லாத இராகம்’ இசைப்பார் இல்லாத படியால் அந்த இராகம் இல்லாது போய்விடும். என்.சுந்தரலிங்கம் ஒரு மிகப் பெரிய அற்புதமான இராகம். ஆனால் இசைப்பார் இல்லாத இராகம். அவர் மரபை, தன்மையை, துறையை ஏற்றுக் கொண்டு போகின்ற ஒரு தலைமுறை உருவாகவில்லை, உருவாக வழிகோலவில்லை என்பதனால் தான் நான் அவரை பற்றி இசைப்பார் இல்லாத இராகம் என்கிற தலையங்கத்தில் பேசலாம் என்று நினைக்கிறேன். அவர் மறைந்துவிட்டார். அவர் எங்களிடம் விட்டுச் சென்ற எழுத்துக்கள்தான் மிஞ்சியிருக்கின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நடிகனுக்கான பயிற்சி

- ந.முத்துசாமி (கூத்துப்பட்டறை, தமிழ்நாடு)

கூத்துப்பட்டறையில் நடிகன் தொடர்ந்து கற்றலில் வைக்கப்படுகிறான். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது நிர்பந்தம் இல்லாத தன்னிச்சையான கற்றல். கற்றலில் வைத்தல் என்பதில் நிர்பந்தம் இருக்கிறது. இது நடிகனின் சுதந்திரத்துக்கு விரோதமானது போலத் தோன்றுகிறது. இது சோம்பேறித்தனத்துக்கு எதிரானது. வேண்டுவதைச் சாதிக்க வேண்டுமென்றால் இந்த நிர்பந்தம் தவிர்க்க முடியாதது. படைப்பாற்றல், திறமை என்ற இரண்டினுள் குறைந்தபட்சம் இதனால் நடிகன் திறமையையாவது பெறுகிறான். உடல்வலி, மனவலி இரண்டுக்கும் அப்பால் படைப்பாற்றல் செயல்படுகிறபோது அவன் உணர்வான் இந்தத் திறமை எப்படிக் கை கொடுக்கிறது என்பதை. எனவே, ஒரு விதமான நிர்பந்தத்துடனேயே கூத்துப்பட்டறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது ஒரு பெரிய சோதனை முயற்சி.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »