பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)அவர்கள் 24.05.2005 அன்று கூத்தரங்கிற்காக வழங்கிய கருத்துரை ஒலிப்பதிவு செய்யப்பட்டு எழுத்துருவாக்கப்பட்டுத் தரப்படுகிறது.
நான் பலகாலமாக ஷேக்ஸ்பியரது வசனத்தைப் பற்றிச் சிந்திப்பதுண்டு. அதாவது, “உலகம் ஒரு நாடக மேடை. மக்கள் எல்லோரும் நடிகர்கள்.” போகப்போக அதனது உண்மை எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியவந்தது.
