- இலக்கியா
அரங்கு பேசவேண்டியவற்றைப் பேசவேண்டும். பேச வேண்டியவை மறை பொருளாகக் கிடக்கும், மௌனமாகக் கிடக்கும். அவை புலணுணர்வைத் தட்டும்போதும் அடக்குமுறைகள், அச்ச நிலைமைகளால் பேசாப் பொருட்கள் ஆகிவிடுகின்றன. 1995இன் பின் ஏற்பட்ட அரசியல், இராணுவ மாறுதல்கள் குடாநாட்டின் அரங்கப் பயணத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருந்தன. அரங்கு புரட்சிக்கான ஊக்கியெனக் கருதியதாலோ என்னவோ, அதன் மீதான இராணுவப் பார்வை கடுமையானதாகவே இருந்தது. அது இன்றுவரை அரங்கியலாளருக்கான அச்ச நிலைமையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.



நிர்வாணம் நாடகம் ஜனகரளய என்ற பல் இன இளைஞர்கள் அடங்கிய நாடகக் குழுவினரால் 01.12.2004 அன்று செயல்திறன் அரங்க இயக்க அலுவலகத்தில் மேடையேற்றப்பட்டது.