சுவிற்ஸர்லாந்தில் தமிழ் அரங்கு

anton-ponrajah.jpgஅன்ரன் பொன்ராஜ்  அவர்களுடனான உரையாடல்.

தே.தேவானந்த்

யாழ்ப்பாணத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடு ஈழத் தமிழ் அரங்க வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக உணரப்படுகிறது. நாடக அரங்கக் கல்லூரி எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் முற்பகுதியில் நடத்திய தொடர் அரங்கக் களப்பயிற்சிகள் முக்கியமானவை.  அவற்றில் பங்கு கொண்ட பலர் தொடர்ந்து அரங்கத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நாடக அரங்கக் கல்லூரி நடத்திய பயிற்சியில் பங்குபற்றியவர். இன்று சுவிஸ்ஸில் தொழில்முறை நடிகராக 1987ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

அரங்கச் செயற்பாட்டாளர் ச.பாஸ்கரன் பற்றி…

அரங்க வரலாற்றில் மறைந்து கிடப்பவர்கள் 01

- ஆனந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் 1994ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வண்டிலொன்று முன் வாயில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அனுமதி பெற்று உள் நுழைகிறது. அதனை வயோதிபத் தோற்றமுடைய ஒருவர் ஓட்டிச் செல்கிறார். மெல்லியதாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. வண்டில்  பல்கலைக்கழக வீதியில் உருளத்  தொடங்கியதும் இரண்டு மாணவர்கள் அதில் ஏறி நின்றபடி செல்கிறார்கள். மாணவர்கள் ஊழியர்கள், விரிவுரையாளர்கள் அனைவரும்  என்ன இது? என்று கேள்வியுடன் அங்காங்கே நின்று பார்க்கிறார்கள். வண்டி ஓட்டி வரும் முதியவர் தோற்றத்தையுடையவர் பாடிச் செல்கிறார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சொற்சித்திரம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

Editorial: நாடகப் போட்டிகள்

சென்ற யூலை, ஓகஸ்ட் மாதங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகமான நாடகப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. சிறுவர் நாடக விழா என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் நாடகப் போட்டிகள் கல்வி வலய ரீதியாக நடைபெற்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பொது இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

நடிப்பு – அது என்ன பண்டம்?

shokkan.jpg- சொக்கன்

மகாவித்துவான் வீரமணி ஐயர் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவருடன் நான்கு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவன் நான்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

செய்தி இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அழகெழல்!

paarampariyam_b.jpg

கூத்தன்

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகம் கடந்த பத்தாண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இக்கழகத்தின் செயற்பாடு யாழப்பாணத்தில் காணப்படுகின்ற பாரம்பரிய அரங்குகளின் வாழ்வுக்கு ஓரளவேனும் உந்து சக்தியாக அமைகின்றதை இனங்காண முடிகின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கட்டுரை இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

இந்திய அரங்கு பற்றி பேராசிரியர் வீ.அரசு அவர்கள்…….

arasu.jpgசென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ.அரசு அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இவர் தமிழ் துறைப் பேராசிரியர் என்பதோடு நாடகத்துறை சார்ந்த ஈடுபாடு மிக்கவர். “கட்டியம்” நாடக இதழ் ஆசிரியராக இருந்து அதனை  வெளியிடுவதில் அரும் பணியாற்றி வருபவர். இவரது மனைவியாராகிய மங்கை அவர்களின் நாடக இயக்கம் சார்ந்த செயற்பாடுகளிற்கு உறுதுணையாக இருப்பதோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாடகச் செயற்பாடுகள் பற்றி நன்கறிந்திருப்பவர். தற்போது தமிழ் நாட்டிலும் மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்ற நாடக முயற்சிகள் பற்றி விமர்சனப் பார்வையுடன் நோக்குபவர். இவர் யாழ்ப்பாணம் வருகை தந்த போது பல விரிவுரைகளை, கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அதில் நாடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை ‘கூத்தரங்கில்” தொகுத்துத் தருகின்றோம்.                                                                                                              (ஆ.ர்)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

பிரயயோக அரங்கு என்பது ஒருவகையான அரங்கு அல்ல…..

இங்கிலாந்து மன்செஸ்ரர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் திரு ஜேம்ஸ் தொம்சன் அவர்கள் பிரயோக அரங்கு பற்றிய கருத்துரையை 29.07.2004 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார். அதன் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகின்றது.                                             (ஆ.ர்)

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

சிரிக்க வைப்பதே ஒரே நோக்கம்

sireeppu_santhirakumar.jpgஅரியாலையூரில் நகைச்சுவை நாடகக் குழு

- இலக்கியா

யாழ்ப்பாணத்தில்  அரியாலைக் கிராமத்தில் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். ஆண்டு சித்திரைப் புத்தாண்டையொட்டி நடைபெற்று வருகின்ற சுதேசிய விழாவின் பேறுகளாக, அதில் முக்கிய ஈடுபாடு கொண்டவர்களாகவும், இந்நாடகத்துறை ஈடுபாடு கொண்டவர்கள் அறியப்பட்டுள்ளார்கள். 

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »

ஐரோப்பாவில் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து

vaddukuthu.jpgஅ.விஐயநாதன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழுமிடங்களெங்கும் தமிழர் தம் பண்பாட்டை, பாரம்பரியங்களைப் பேணிவருதல் என்பது தாய் நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வேணவாவைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்ந்துவரும் ‘தமிழ்ப் பிள்ளைகள்’ தமிழ் மண்ணின் பண்பாடுகளை, பாரம்பரியங்களை அறிய வேண்டும் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் அவாவாகும். இதன் காரணமாகப் பலர் தமிழ்ப் பற்றுறுதியுடன் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான பல முயற்சிகள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுகின்றன.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆக்கம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழி இல்லை »